முகப்பு செஞ்சி விளையாட்டு உபகரணங்களை வழங்கிய செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர்

18 மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பாராட்டு

by Tindivanam News

செஞ்சி தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பல பள்ளிகளும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடின. அதிலும் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைபள்ளி மாணவிகள் கால்பந்தாட்ட போட்டிகளில் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக 17 வயதிற்குட்பட்ட கால்பந்தாட்ட போட்டிகளில் மகளிர் பிரிவில் குறு மையம் மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பாக விளையாடி முதலிடம் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து திருச்சியில் வரும் டிசம்பர் 2’ம் தேதி நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்குகொள்கின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் அவர்கள் 18 மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி போட்டியில் வெற்றிபெற பாராட்டினார்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  நந்தன் கால்வாய் திட்டப்பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole