முகப்பு திண்டிவனம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி

வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

by Tindivanam News
5 Sawaran jewels stolen from a woman on a scooter

ரோஷணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரோஷணை அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சரசு, 53; இவர், திண்டிவனம், காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மெஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவர், சரசு கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  கிரிவலம் சென்ற இளம்பெண்ணின் சாவில் மர்மம் விலகல் !

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole