முகப்பு திண்டிவனம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி

ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகை வழிப்பறி

வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

by Tindivanam News
5 Sawaran jewels stolen from a woman on a scooter

ரோஷணை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 5 சவரன் நகையை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ரோஷணை அடுத்த கொள்ளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மனைவி சரசு, 53; இவர், திண்டிவனம், காமாட்சி அம்மன் கோவில் தெருவில் மெஸ் வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு கடையை பூட்டி கொண்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்றார். கொள்ளார் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, எதிரே பைக்கில் ெஹல்மெட் அணிந்து வந்த இருவர், சரசு கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதன் மதிப்பு 2 லட்சம் ரூபாய் ஆகும். இதுகுறித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  திண்டிவனம் ஆா்டிஓ அலுவலகத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole