முகப்பு ஆன்மிகம் கிடங்கல் கோட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா

கிடங்கல் கோட்டை சிவாலயத்தில் 108 சங்காபிஷேக விழா

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

by Tindivanam News
108-sangabhisheka-ceremony-at-gidangal-siva-temple

திண்டிவனம், கிடங்கல் கோட்டையில் அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை அன்பு நாயக ஈஸ்வரர் சிவாலயத்தில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் 108 சங்குகள் மற்றும் கலசங்கள் பிரதிஷ்டை செய்து யாகசாலை வேள்வி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 108 சங்குகள் மற்றும் கலசங்கள் மேளதாளத்துடன் கோவில் உட்பிரகாரம் வலம் வந்து மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதேபோல் மூலவர் அன்ப நாயக ஈஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  ரயில்வே ஊழியரின் மனைவி வீட்டில் இருக்கும்போது போதையில் நுழைந்த ஆசாமி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole