முகப்பு அரசியல் 5 மாநில தேர்தலுக்கு பின்பு, மிசோரம் தேர்தல் கருத்துக்கணிப்பு

5 மாநில தேர்தலுக்கு பின்பு, மிசோரம் தேர்தல் கருத்துக்கணிப்பு

மிசோரம் தேர்தலில் வெற்றி யாருக்கு வசப்படும் என்று பார்ப்போம்

by Tindivanam News
mizoram election polls result 2023

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.

தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை : 40

ஜன் கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி,

  சாதிய ஏற்றத்தாழ்வுக்கு எதிராக உடனடி தீர்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என்றும் பாஜக 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole