தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.
தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.
மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை : 40
ஜன் கிபாத் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பின் படி,
மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ஜோரம் மக்கள் இயக்கம் 15 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், மிசோ தேசிய முன்னணி 10 முதல் 14 தொகுதிகளில் வெல்லும் என்றும், காங்கிரஸ் 5 முதல் 9 தொகுதிகளில் வெல்லும் என்றும் பாஜக 0-2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.