முகப்பு குற்றச்செய்திகள் திண்டிவனம் ரவுடிகளின் வீடுகளின் போலீசார் தீடீர் ஆய்வு

திண்டிவனம் ரவுடிகளின் வீடுகளின் போலீசார் தீடீர் ஆய்வு

கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

by Tindivanam News
rowdy list houses searched in tindivanam

திண்டிவனத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் ஆய்வு செய்தனர். கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் உள்ளவர்களும், காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளவர்களும் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து போலீசுக்கு புகார்கள் வந்தது. அதனைத் தொடர்ந்து, எஸ்.பி., சசாங்சாய் உத்தரவின் பேரில், திண்டிவனம் டவுன் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சுதன், சீனுவாசன் மற்றும் போலீசார், ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ள திண்டிவனம் கிடங்கல் (2) பகுதியில் உள்ள பாஸ்கர், சஞ்சீவிராயன்பேட்டை மணிகண்டன், பொலக்குப்பம் ரோடு யுவராஜ் ஆகியோர்களின் வீடுகளுக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, குற்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  உடும்பு வைத்திருந்த இருவர் கைது செய்து சிறையில் அடைப்பு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole