முகப்பு மரக்காணம் மரக்காணத்திலிருந்து செல்லும் மிக்ஜாம் நிவாரண பொருட்கள்

மரக்காணத்திலிருந்து செல்லும் மிக்ஜாம் நிவாரண பொருட்கள்

ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பிவைப்பு

by Tindivanam News
relief items from tree stumps for people of chennai

சமீபத்தில் பெய்த கனமழையாலும், மிக்ஜாம் புயல் காரணமாலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் முக்கியமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலாக பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளுதவி, உணவு மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 30 லட்சம் அளவில் நிவாரண பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 10 கிலோ அரிசி மூட்டைகள், 25 கிலோ அரிசி மூட்டைகள், பெட்ஷீட்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் ரஸ்க் பாக்கெட்கள் ஆகியவனும் அடங்கும். இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole