கொரோனா தொற்று மற்றும் நீண்டநாட்களாக உடல் நலக்குறைவினால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாதிக்கப்பட்டிருந்தார். வெளிநாடுகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி காலமானதாக மியாட் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. விஜயகாந்த்தின் மறைவு செய்தி அறிந்து தேமுதிக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுகின்றனர்.
கேப்டன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும், திண்டிவனம் செய்திகள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.