முகப்பு உலகம் அமெரிக்காவில் செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை

அமெரிக்காவில் செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை தண்டனை

நோயாளிகளைக் கொன்ற குற்றத்திற்காக செவிலிக்கு தண்டனை

by Tindivanam News

தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர் அதிகப்படியான இன்சுலின் ஊசி செலுத்தி நோயாளிகளை கொன்ற விவகாரம் அமெரிக்காவில் பெரிதும் பரபரப்பை எப்படுத்தியது.

அமெரிக்கா நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தைச் சோ்ந்தவர் ஹெதா் பிரஸ்டீ என்ற 41 வயது பெண் செவிலி. இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், 2020-ஆம் ஆண்டிலிருந்து 2023-ஆம் ஆண்டு வரை 22 நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்தை அதிக அளவில் செலுத்தியதாகவும் அவா்களில் 17 போ் மரணமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், அவரால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 43 முதல் 104 வயது வரையிலானவா்கள். தனது நோயாளிகள் மீதான வெறுப்பை பெற்றோா்களிடமும் சக நண்பா்களிடமும் ஹெதா் நீண்ட காலமாகவே வெளிப்படுத்திவந்ததாகக் கூறப்படுகிறது. நோயாளிகள் வாழ விரும்பினாலும், அவா்கள் இனி வாழத் தகுதியில்லாதவா்கள் என்று அவரே முடிவு செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால இன்சுலின் ஊசி மருந்து செலுத்தி தனது 17 நோயாளிகளைக்கொன்றுள்ளார். நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹெதருக்கு 760 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்காவை மட்டும்மல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  நைஜீரியா: பெட்ரோல் லாரி வெடித்து 147 போ் உயிரிழப்பு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole