முகப்பு வேலைவாய்ப்பு அரசு வங்கியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – செப். 17 கடைசி நாள்

அரசு வங்கியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு – செப். 17 கடைசி நாள்

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில் 500 அப்ரன்டிஸ் பணியிடங்கள்

by Tindivanam News

அரசு வங்கியான யூனியன் பாங்க் ஆப் இந்தியாவில், தொழில் பயிற்சி சட்டம் 1961ன் கீழ், 500 அப்ரன்டிஸ் காலிப்பணியிடங்கள் பட்டதாரிகள் நிரப்பப்பட உள்ளன.

தமிழகத்தில் எத்தனை பணியிடங்கள்?
மொத்தம் உள்ள 500 அப்ரன்டிஸ் காலியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 55 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களான, ஆந்திராவில் 50 இடங்களும், கேரளாவில் 22 இடங்களும், கர்நாடகாவில் 40 இடங்களும் உள்ளன.

கல்வி தகுதி & வயது வரம்பு :

பணியில் சேர விரும்புவோர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்வோர் 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒ.பி.சி., பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவு : ரூ.944
எஸ்.சி., எஸ்.டி, பிரிவு : ரூ.708.
PwBD பிரிவு : ரூ.472

  உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடைக் கட்டுப்பாடு

தேர்வு செய்யப்படுவது எப்படி?
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். https://www.unionbankofindia.co.in/english/home.aspx என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole