முகப்பு இந்தியா ஐஐடியில் படித்தும் 8,000 மாணவர்களுக்கு வேலை இல்லை

ஐஐடியில் படித்தும் 8,000 மாணவர்களுக்கு வேலை இல்லை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறியப்பட்டுள்ளது

by Tindivanam News

உலகத்தரம் வாய்ந்த இந்திய கல்வி நிறுவனங்களான ஐஐடி’ல் 2023 – 24 கல்வியாண்டில் பயின்ற 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றத் தகவல் வெளியாகி கல்லூரி படிக்கும் மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல், கடந்த கல்வியாண்டில், ஐஐடியில் பயின்ற மொத்தம் 21,500 மாணவர்கள் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், 13,410 மாணவர்களுக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகங்களில் (IIT) பயிலும் மாணவர்களுக்கு பெரும் பன்னாட்டு நிறுவனங்களில் அதிக ஊதியத்துக்கு வேலை கிடைக்கும் என்ற பெருமை இருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் கல்வியை முடித்தவர்களில் பலருக்கு வேலை கிடைக்காத சூழல் நிலவுகிறது.

ஐஐடி கான்பூரின் முன்னாள் மாணவரும், வேலைவாய்ப்பு வழிகாட்டியுமான தீரஜ் சிங் லிங்க்டின் (LINKEDIN) தளத்தில் IIT’ல் படித்த மாணவர்களின் வேலைவாய்ப்பு பற்றி சில தகவல்களை பகிர்ந்திருந்தார்.

அதன்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட 23 அறிக்கைகளின் பகுப்பாய்வில், கடந்த 2024ஆம் ஆண்டு ஐஐடியில் பயின்றவர்களில் 21,500 பேர் கேம்பஸ் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில், 13,410 பேருக்கு வேலை கிடைத்த நிலையில், 8,090 பேர் வேலை கிடைக்காமல் உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும், வேலை கிடைக்காத மாணவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  நெய் பரிசோதனை - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்த செய்தி இந்திய மாணவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole