முகப்பு உலகம் உலக நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா

உலக நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா

27 நாடுகளில் பரவியுள்ளதால் அதிர்ச்சி

by Tindivanam News

உலகையே மிரட்டிய கொரோனா தற்போதுதான் சிறிது ஓய்ந்து உள்ளது என்று எண்ணும்போதே பெரும் அதிர்ச்சிதரும் செய்தி வெளியாகியுள்ளது. கொரோனாவின் அடுத்த அதிர்ச்சியாக XEC variant என்ற புதிய வகை கொரோனாவின் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டுவிக்க ஆரம்பித்து உள்ளது.

இந்த வகை கொரோனா வைரஸ் பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா ,நெதர்லாந்து உள்ளிட்ட 27 நாடுகளில் இந்த கொரோனா பரவி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், போலந்து, நார்வே, சீனா, உக்ரைன், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் பரவி இருக்கிறது.

அதிக தாக்கம் கொண்ட இந்த புதிய வகை திரிபு குறித்து பிரிட்டனில் மக்களுக்கு கடும் எச்சரிக்கையும், விழிப்புணர்வும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வகையான வைரஸ் திரிபு முதன்முதலில் ஜெர்மனியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இது மேலும் உலகின் மற்ற நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு இருப்பதாகவும், புதிய அலை ஒன்றை உருவாக்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

  மீண்டும் உக்கிரமடையும் ரஷ்யா உக்ரைன் போர்

இந்த தோற்று ஏற்பட்டால் காய்ச்சல், தொண்டை வலி, இடைவிடாத இருமல், வாசனை நுகர்வை இழத்தல், உடல் வலி போன்றவை காணப்படும். உலக மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகை கொரோனா திரிபின் தன்மை மற்றும் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறி இருக்கின்றனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole