முகப்பு மரக்காணம் கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்

by Tindivanam News

விழுப்புரம் மாவட்டம், கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளது. இந்த இடத்தை சென்னை, கீழ்பாக்கத்தைச் சேர்ந்த சிலர் கூட்டாக சேர்ந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டி ஆக்கிரமிப்பு செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்தனர். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் மரக்காணம் வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவைத் துறையினர் இடத்தை அளவீடு செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

ஆக்கிரமிப்பு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதால் அங்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர், ஷெட் ஆகியவைகளை உடனே அகற்றும் படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், நேற்று முன்தினம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய்த் துறையினர் கீழ்புத்துப்பட்டு கடற்கரையோரம் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் இடித்து அகற்றினர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  விழுப்புரத்தில் உலக மரபு வார விழா

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole