முகப்பு திண்டிவனம் திண்டிவனத்தில் டிவி விழுந்து காயமடைந்த குழந்தை, இறப்பு

திண்டிவனத்தில் டிவி விழுந்து காயமடைந்த குழந்தை, இறப்பு

இரண்டரை வயது குழந்தைக்கு நடந்த சோகம்

by Tindivanam News

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் டவுன் கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரின் மகன் தர்ஷனுக்கு இரண்டரை வயதாகிறது. கடந்த 11ம் தேதி தர்ஷன் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் டேபிள் மீது இருந்த தொலைக்காட்சிப் பெட்டி (டி.வி) குழந்தை தர்ஷன் மீது விழுந்துள்ளது.

இதில், படுகாயமடைந்த தர்ஷனுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 12 மணியளவில் குழந்தை இறந்துவிட்டது.

தகவலறிந்த திண்டிவனம் போலிசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை டி.வி விழுந்து அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  ஆம்னி பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் சீண்டல்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole