முகப்பு அறிவிப்புகள் TNPSC குரூப் – 4 பணியிடங்கள் அதிகரிப்பு – உங்கள் சந்தேககங்களுக்கு விடை

TNPSC குரூப் – 4 பணியிடங்கள் அதிகரிப்பு – உங்கள் சந்தேககங்களுக்கு விடை

குரூப் - 4 தொடர்பான சந்தேகங்களுக்கு TNPSC விளக்கம்

by Tindivanam News

குரூப் – 4 தேர்வுக்கான பணியிடங்கள் அதிகரிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குறைதீர் அழைப்பு மையம் மூலம் கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வி: ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி IV, 2024 இல் போதுமான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா?

2022 இல் நடைபெற்ற குரூப் IV தேர்வின் மூலம் 2020-21, 2021-22, 2022- 23 ஆகிய மூன்று நிதி ஆண்டுகளுக்கான 10,139 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதாவது சராசரியாக, ஒரு நிதியாண்டிற்கு 3380 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

2024 இல் நடைபெற்ற குரூப் IV தேர்வின் மூலம் 2023-24, 2024-25 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளுக்கான 8,932 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது ஒரு நிதியாண்டிற்கு 4466 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

எனவே 2024 ம் ஆண்டு குரூப் IV தேர்வின் மூலம் சராசரியாக ஒரு நிதியாண்டிற்கு கூடுதலாக 1086 (4466-3380) காலிப்பணியிடங்கள், ஆக மொத்தம் 2172 (1086×2) காலிப்பணியிடங்கள் கூடுதலாக நிரப்பப்படவுள்ளன. எனவே சமூக வலைதளங்களில் காலிப்பணியிடங்கள் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  மீண்டும் உயரும் தங்கம் விலை, தங்கம் விலை எப்போது குறையும் ? - தங்கம் விலை நிலவரம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole