முகப்பு மருத்துவம் மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை – ஆயுஷ்மான் பாரத் யோஜனா

மூத்த குடிமக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை – ஆயுஷ்மான் பாரத் யோஜனா

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

by Tindivanam News

ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு 2018ல் துவங்கியது. இந்த திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்கள் (சுமார் 50 கோடி பயனாளிகள்) பலனடைகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான இவலச சிகிச்சைகள் பெறலாம்.

தற்போது, ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த மூத்த குடிமக்களுக்கும் ரூ. 5 லட்சம் வரையிலான இலவச சிகிச்சை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று பல முக்கிய முடிவுகள், ஒப்புதல்கள் அளிக்கப்பட்டது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

அதன்படி,

  1. ஆயுஷ்மான் பாரத் சுகாதார காப்பீட்டு திட்டத்தில் 70 வயது கடந்த 6 கோடி மூத்த குடிமக்கள் ரூ. 5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறலாம். வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.
  2. பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் கிராமங்களுக்கு 62,500 கி.மீ. தூர சாலைகள்.
  3. பி.எம். ‛‛இ” டிரைவ் திட்டத்திற்கு 10ஆயிரத்து 900 கோடி ஒதுக்கீடு .
  4. மின்சார ஆம்புலன்ஸ்களுக்கு ரூ. 500 கோடி நிதி ஒதுக்கீடு.
  5. நீர்மின் திட்டங்களுக்கு 12,461 கோடி நிதி ஒதுக்கீடு.
  உலக நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா

இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole