இந்திய அளவிலும், தென் மாநிலம் முழுதும், வெண்மை நிற ஆடைகளை ராம்ராஜ் நிறுவனம், உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஷோரூம்களை திறந்து விற்பனை செய்து வரும் நிலையில், ராம்ராஜ் நிறுவனத்தின் புதிய ஷோரூமை திண்டிவனம் நகராட்சி செஞ்சி சாலையில், பஞ்சாப் நேஷனல் வங்கி அருகில் துவங்கியுள்ளது.
ஷோரூமை, திண்டிவனம் மருத்துவ இயக்குனர் பரசுராமன் திறந்து வைத்தார். விழாவில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் வரவேற்றார். திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் கோதண்டம் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். வழக்கறிஞர் ரமணன் முதல் விற்பனையை பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் இந்நிறுவனம் www.ramrajcotton.in, என்ற இணையதளத்தில் ஆன்லைன் விற்பனையை விரிவுபடுத்தி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது.