தமிழகத்தில் மாநிலக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12’ம் வகுப்பு மாணவ- மாணவியருக்கு கடந்த மார்ச் மாதம் 1’ம் தேதி துவங்கி 22’ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. இந்த பொதுத்தேர்வை சுமார் 7.6 லட்சம் தமிழக மாணவர்கள் எழுதினார்கள்.
பின்பு மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட்டு மே 6’ம் நாள் தேர்வு முடிவுகள் வெளியானது. எப்போதும்போல மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சிவிகிதம் இந்த வருடமும் கூடுதலாகவே இருந்தது. நடந்து முடிந்த 12’ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவர்கள் 92.37 சதவிகிதமும் மாணவிகள் 96.44 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வு முடிவுகளை காண :
மேலும் மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதங்களும் வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பூரில் 97.45% பெற்றுள்ளனர்.
மாவட்டம் வாரியாக தேர்ச்சி விகிதம்:
- திருப்பூர் – 97.45%
- ஈரோடு -97.42%
- சிவகங்கை -97.42%
- அரியலூர் -97.25%
- கோவை -96.97%
- விருதுநகர் -96.64%
- திருநெல்வேலி -96.44%
- பெரம்பலூர் -96.44%
- தூத்துக்குடி -96.39%
- நாமக்கல் -96.10%
- தென்காசி -96.07%
- கரூர் -95.90%
- திருச்சி -95.74%
- கன்னியாகுமரி -95.72%
- திண்டுக்கல் -95.40%
- மதுரை -95.19%
- ராமநாதபுரம் -94.89%
- செங்கல்பட்டு -94.71%
- தேனி -94.65%
- சேலம் -94.60%
- சென்னை -94.48%
- கடலூர் -94.36%
- நீலகிரி -94.27%
- புதுக்கோட்டை -93.79%
- தருமபுரி -93.55%
- தஞ்சாவூர் -93.46%
- விழுப்புரம் -93.17%
- திருவாரூர் -93.08%
- கள்ளக்குறிச்சி -92.91%
- வேலூர் -92.53%
- மயிலாடுதுறை -92.38%
- திருப்பத்தூர் -92.34%
- ராணிப்பேட்டை -92.28%
- காஞ்சிபுரம் -92.28%
- கிருஷ்ணகிரி -91.87%
- திருவள்ளூர் -91.32%
- நாகப்பட்டினம் -91.19%
- திருவண்ணாமலை -90.47%
- மொத்தம் -94.56%
- புதுச்சேரி -93.38%
- காரைக்கால் -87.03%