முகப்பு வேலைவாய்ப்பு மத்திய படையில் 545 டிரைவர் காலியிடங்கள் – பத்தாம் வகுப்பு போதும்

மத்திய படையில் 545 டிரைவர் காலியிடங்கள் – பத்தாம் வகுப்பு போதும்

நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க !

by Tindivanam News

இந்தோ – திபெத் எல்லை போலீஸ் மத்திய படையில், 545 ‘கான்ஸ்டபிள்’ காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தோ – திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கான்ஸ்டபிள் (டிரைவர்) பிரிவில் 545 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 6.

கல்வித்தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் அவசியம்.

வயது வரம்பு.

விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்வது எப்படி?

உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்.

  மக்களே வெளிநாட்டு வேலை என ஆசை காட்டி மோசடி செய்யுறாங்க - உஷார் !

விண்ணப்பக்கட்டணம் ரூ. 100. எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole