முகப்பு இந்தியா நெய் பரிசோதனை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

நெய் பரிசோதனை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

ஏ.ஆர்.நிறுவனத்திற்கு எந்த அடிப்படையில் நோட்டீஸ்?

by Tindivanam News

திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் வழங்கிய ஏ.ஆர்.நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸ்க்கு தடை கோரி அந்நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல்.

ஏ.ஆர்.நிறுவனம் செய்த விதிமீறல் என்ன? எந்த அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது?

உச்ச நீதிமன்றம் கூறியது போல அரசியலில் இருந்து கடவுளை விலக்கி வைத்து விசாரணை நடத்துவதே சரியாக இருக்கும். ஒரு நோட்டீஸ் அனுப்பினால், அதற்கு பதிலளிக்க உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்திருந்தார்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன விதிமீறல் செய்தது என்ற எந்த விபரமும் நோட்டீசில் இல்லை. நெய் சோதனையில் குஜராத் ஆய்வகம் கொடுத்த அறிக்கைக்கும், சென்னை கிங்க்ஸ் ஆய்வக அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது.

சென்னை ஆய்வில் கலப்படம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு நிறுவனம்தான். அதனால், மத்திய அரசானது அந்நிறுவனத்திற்கு புதிய நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

  பி.எஸ்.என்.எல். (BSNL) நிறுவனத்தின் புதிய லோகோ வெளியீடு

பதிலளிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole