முகப்பு அரசியல் 5 மாநில தேர்தலுக்கு பின்பு, மத்தியப் பிரதேசத் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது

5 மாநில தேர்தலுக்கு பின்பு, மத்தியப் பிரதேசத் தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியானது

மத்தியப் பிரதேசத் தேர்தலில் வெற்றி யாருக்கு?

by Tindivanam News
madhya pradesh election polls result 2023

தெலுங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் (எக்ஸிட் போல், Exit Poll) வெளியிடப்பட்டு வருகின்றன.

தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி இன்று வரை நடைபெற்றன. இந்த தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக பல்வேறு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் மத்தியப் பிரதேசம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த சட்டமன்ற தொகுதிகள் எண்ணிக்கை : 230

ரிபப்ளிக் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் 230 தொகுதிகளில் 203 தொகுதிகளுக்கான கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பாஜக 118 முதல் 130 தொகுதிகளில் வெல்லும் எனவும், காங்கிரஸ் 97 முதல் 107 தொகுதிகளில் வெல்லும் எனவும் மற்ற கட்சிகள் 0-2 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5 மாநில தேர்தலுக்கு பின்பு, சத்தீஸ்கர் தேர்தல் கருத்துக்கணிப்பு

ஜன்கிபாத் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், காங்கிரஸ் 102 முதல் 125 தொகுதிகள் வரை வெல்லும் எனவும், பாஜக 100 முதல் 123 தொகுதிகள் வரை வெல்லும் எனவும் மற்றவை 0-5 தொகுதிகளில் வெல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole