முகப்பு ஆன்மிகம் இனி திருப்பதியில் காசு கொடுக்க வேண்டாம், இலவசமாக திருநாமம்

இனி திருப்பதியில் காசு கொடுக்க வேண்டாம், இலவசமாக திருநாமம்

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு

by Tindivanam News

உலகளவில் திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசித்தம். இங்கு கடந்த ஆகஸ்டு மாதம் மட்டும் 22 லட்சத்து 42 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருநாமம் இட ரூ. 10 முதல் 20 வரை வசூலிக்கப்படுகிறது. ஒரு சிலர் பக்தர்களை அடாவடியாக வழிமறித்து நெற்றியில் திருநாமமிட்டு அதிக அளவில் பணத்தை வசூல் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.

இதனை தவிர்க்க, திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில் திருப்பதி கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நெற்றியில் இலவசமாக திருநாமம் இட ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பதி மலையில் உள்ள ஏடிசி பகுதியில் இந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தொடங்கி வைத்தார். ஸ்ரீவாரி சேவா தொண்டர்கள் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக நெற்றியில் திருநாமம் செலுத்தி வருகின்றனர். இதனால் இனிமேல் ரூ.10 கட்டணம் செலுத்தி திருநாமமிட வேண்டியது இல்லை.

  மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

இந்த செய்தியால் திருப்பதி செல்லும் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole