முகப்பு ஆன்மிகம் திண்டிவனம் வந்த காஞ்சி மடாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

திண்டிவனம் வந்த காஞ்சி மடாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு

by Tindivanam News

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக காஞ்சி மடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று மாலை திண்டிவனம் வழியாகப் பயணித்தார். மாலை 6.30 மணியளவில் திண்டிவனம் வந்த அவருக்கு, பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சலவாதி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு, திண்டிவனம் புரோகிதர் சங்கத் தலைவர் சீனுவாச ஐயர் தலைமை தாங்கினார். இதில் ஓமந்தூர் ஸ்ரீராம் பள்ளியில் செயல்படும் திரிவேணி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காஞ்சி மடாதிபதியை வரவேற்றனர்.

  இனி திருப்பதியில் காசு கொடுக்க வேண்டாம், இலவசமாக திருநாமம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole