முகப்பு மரக்காணம் உணவக தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

உணவக தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி பலி

மரக்காணத்தில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட சோகம்

by Tindivanam News

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி மீனாட்சி 35. இவர் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் தூய்மைப் பணியாளராக பணி செய்து வந்தார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை வருவதையொட்டி உணவகத்தில் மின்சார அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வந்துள்ளது. அந்த பணியின் போது அப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்ட மீனாட்சி எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து கீழே சரிந்தார். அருகில் இருந்தவர்கள் மீனாட்சியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது சோதனை செய்த மருத்துவர்கள் மீனாட்சி மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மரக்காணம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  அறுவடைக்கு தயாரான தர்பூசணிகள் சேதம்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole