முகப்பு மற்றவை இனிமேல் டார்லிங்’னு சொன்னால் சிறை தான் – நீதிமன்றம் எச்சரிக்கை

இனிமேல் டார்லிங்’னு சொன்னால் சிறை தான் – நீதிமன்றம் எச்சரிக்கை

இந்த குற்றத்திற்கு சிறை தண்டனை விதிக்கலாம்

by Tindivanam News

முன்பின் தெரியாத பெண்ணை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துப்புறுத்தலுக்கு சமம், இந்த குற்றத்திற்காக சிறை தணடனையும் வழங்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாங்க விரிவாக என்னனு பார்ப்போம்.

கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு ஒன்றில், முன்பின் தெரியாத பெண்களை டார்லிங் என கூப்பிடுவது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது, இந்த குற்றத்திற்கு சிறை தண்டனை விதிக்கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில்.அந்தமானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபடுத்தப்பட்டு இருந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த ஜானக் ராம் என்பவர் பெண் போலீசைப் பார்த்து டார்லிங் என அழைத்துள்ளார்.

இது நிகழ்வு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அளித்த புகாரின் பேரில் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த ஆண்டு குற்றவாளி ஜானக் ராமுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

  மிஸ் இந்தியா 2024 பட்டத்தை வென்ற நிகிதா போர்வால்

இந்த தீர்ப்பை எதிர்த்து, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஜானக் ராம் மேல்முறையீடு மனு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிகள்” முன்பின் தெரியாத பெண்களை ‘டார்லிங்’ என அழைப்பது பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடானது. பாலியல் நோக்கத்துடன் இவ்வாறு அழைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஜானக் ராம் என்னும் நபருக்கு சிறை தண்டனை விதிக்கலாம்” என உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. மற்ற நீதிமன்றங்களும், பொதுமக்களும் இந்த உத்தரவிற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole