முகப்பு புதுச்சேரி புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கடல் அலைகள் சீற்றத்தினால் அதிகாரிகள் நடவடிக்கை

by Tindivanam News
waves rage in puducherry sea public avoided to bath

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், புதுச்சேரி கடற் பகுதியில் வழக்கத்தை விடவும் கடல் அலைகள் சீற்றமாக காணப்படுகின்றது. இதனால் புதுச்சேரிக்கு வருகைத் தந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் கடலில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி குளிக்க முயன்ற ஒரு சிலரை போலீசார் எச்சரித்து வெளியேற்றினர். மேலும், பொதுமக்கள் கடற்கரை சாலைக்கு செல்லாதபடி சாலை சந்திப்புகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் பாதுகாப்பு நடைமுறைகள் செய்தனர்.

புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  100 ரூபாயில் ஊட்டியை சுற்றிபார்க்கலாம் - உங்களுக்கு தெரியுமா?

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole