திண்டிவனம் அருகே ஆம்னி பஸ் மேல் வைக்கப்பட்டிருந்த இருந்த லக்கேஜ் மின்கம்பியில் உரசியதால் மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் பதற்றத்தில் அலறியடித்து ஓடினர்
பெங்களூருவில் இருந்து புதுச்சேரியை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ் நேற்று விடியற்காலையில் 5:00 மணிக்கு திண்டிவனம் அடுத்த சந்தைமேடு பகுதி அருகே வந்த போது, பஸ்சின் மேல்பகுதியில் வைக்கப்பட்டிருந்த லக்கேஜ், மேலே சென்ற மின் கம்பி மீது உரசி தீப்பொறி பறந்தது. மேலும், லக்கேஜியில் சிக்கிய மின் கம்பி அறுந்து கீழே விழுந்தது.
இதனால் அவ்வழியே சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மின்கம்பி அறுந்து விழுந்ததால் சந்தைமேடு பகுதியில் பகுதியில் மின்சாரம் தடைபட்டது. மின் ஊழியர்கள் விரைந்து சென்று, மின் இணைப்பை சரி செய்தனர்.
இச்சம்பவத்தால் சந்தைமேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.