திண்டிவனம் அருகே உறவினர் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த கீழ் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் மற்றும் சுந்தரி ஆகிய இருவரின் ஐந்து வயது மகன் மோத்திஸ். மோத்தீஸ் சம்பவத்தன்று, ஆவணிப்பூர் செல்லும் வழியில் உள்ள நொளம்பூர், உறவினர் வீடு மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தனது அம்மாவுடன் சென்றிருந்தான்.
அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பாப்கார்ன் போடும் இயந்திரத்தின் மின்சார பிளக்கை மோத்திஸ் தெரியாமல் பிடித்துள்ளான். இதனால் மின்சாரம் பாய்ந்து துடித்த குழந்தையை மீட்டு, திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அருகிலிருந்தவர்கள் கொண்டு சென்றனர். இருப்பினும், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே மோத்திஸ் உயிர் இழந்துவிட்டேன்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுபநிகழ்வில் ஐந்து வயது சிறுவன், தாய் மற்றும் உறவினர்கள் கண்முன்னே மின்சாரம் பாய்ந்து உயிர் இழந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பின்பு, குழந்தையின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல்கூறு ஆய்வு முடிந்தபின் குழந்தையின் உடல் அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டது.