முகப்பு திண்டிவனம் திண்டிவனத்தில் தொடர்ந்து நடைபெறும் பாதாள சாக்கடைப் பள்ள விபத்துக்கள்.

திண்டிவனத்தில் தொடர்ந்து நடைபெறும் பாதாள சாக்கடைப் பள்ள விபத்துக்கள்.

பெரும் விபத்து அல்லது உயிர் சேதம் ஏற்படும் முன் தடுக்குமா அரசு?

by Tindivanam News
lorry stuck in sewer ditch at tindivanam

திண்டிவனம் நகராட்சியில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடைத் திட்டம் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாததால் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு சாலையில் செல்லும் வாகனங்கள் பள்ளங்களில் கவிழ்ந்து விபத்துக்கள் ஏற்படுகிறது. ஏற்கனவே, பள்ளி வாகனங்கள் முதற்கொண்டு பல வாகனங்கள் விபத்துக்குள்ளாகிய நிலையில் நேற்று மேலும் பார் மண் ஏற்றி வந்த லாரி பாதாள சாக்கடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக லாரியை ஒட்டி வந்த ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்.

லாரி பாதாள சாக்கடை பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

இவ்வாறு திண்டிவனம் பகுதியில் பாதாள சாக்கடை பள்ளத்தில் வாகனங்கள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவது தொடர் கதையாகி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. பெரும் விபத்துக்கள் அல்லது உயிர் சேதம் ஏற்படும் முன் திண்டிவனம் நகராட்சி இந்த விடயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  ரயில்வே ஊழியரின் மனைவி வீட்டில் இருக்கும்போது போதையில் நுழைந்த ஆசாமி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole