முகப்பு திண்டிவனம் போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரி

போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரி

காலக்கெடு 30ஆம் தேதி வரை நீட்டித்து அறிவிப்பு

by Tindivanam News

வாடகை போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்கள் ஆம்னி பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களுக்கு காலாண்டு வரி செலுத்துவது வழக்கம். அதன்படி திண்டிவனத்தில் உள்ள போக்குவரத்து வாகனங்களுக்கான காலாண்டு வரி அபராதம் இன்றி செலுத்தும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக திண்டிவனம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் தெரிவித்துள்ளார். மேற்படி, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத வாகனங்களின் வரியை தமிழக அரசு கடந்த ஒன்பதாம் தேதி உயர்த்தியது. தற்போது 2023’ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை உள்ள காலாண்டிற்கான வாகன வரியை 14’ஆம் தேதிக்குள் கட்ட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் வாகன உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று அபராதம் இன்றி வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை 30ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாகன உரிமையாளர்கள் காலாண்டு வரியை விரைவில் செலுத்தி ரசிது பெற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  திண்டிவனத்தில் விவசாயியிடம் ரூ.1.37 லட்சம் பணம் மோசடி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole