முகப்பு திண்டிவனம் திண்டிவனம் சவுண்டு சர்வீஸ் கடையில் கொள்ளை

திண்டிவனம் சவுண்டு சர்வீஸ் கடையில் கொள்ளை

வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யும் போலீசார்

by Tindivanam News
robbery in sound service shop at tindivanam

திண்டிவனம் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவர் திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் அருகில் சவுண்ட் சர்வீஸ் மற்றும் எலக்ட்ரானிக் சரிபார்ப்பு கடை நடத்தி வந்தார். அவர் இறந்த பின்பு இந்த கடை வெகு நாட்களாக பூட்டியே கிடந்தது. இந்நிலையில் நேற்று வெங்கடேசனின் மனைவி தெய்வநாயகி கடையைத் திறக்கும் பொழுது பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த எலக்ட்ரிக் சாதனங்கள் திருடப்பட்டது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தெய்வநாயகி கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிக் கிடந்த சவுண்ட் சர்வீஸ் கடையில் பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  ஏரியில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள்

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole