முகப்பு திண்டிவனம் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

by Tindivanam News
petition protest against smart meter project in tindivanam

மின் அளவீடு முறையை சீர்மைப்படுத்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல மாநிலங்களிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு, நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை எதிர்த்து திண்டிவனத்தில் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திண்டிவனம் மரக்காணம் ரோடு பகுதியில் அமைந்துள்ள மின்கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஒன்றுகூடிய விவசாய சங்கத்தினர் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்பு மின்கோட்ட பொறியாளர் சிவசங்கரனிடம் கோரிக்கை மனுவை சங்க நிர்வாகிகள் கொடுத்தனர். இந்த போராட்டத்திற்கு மயிலம் ஒன்றியத்தலைவர் கமலக்கண்ணன் தலைமைத் தாங்கினார்.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole