முகப்பு திண்டிவனம் சாத்தனூரில் சாவு வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

சாத்தனூரில் சாவு வீட்டிற்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்

பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயம்

by Tindivanam News

திண்டிவனம் அருகே சாத்தனூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த தேவன் 31 என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேற்று உயிரிழந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்த அவரது குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் திரண்டு ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவருடைய உடல் வைத்திருந்த ஃப்ரீசர் பாக்ஸ் மூலமாக மின்சாரம் பாய்ந்தது. இதனால் அங்கு குழுமியிருந்த பொதுமக்களில் 13 பேருக்கு மின்சாரம் பாய்ந்து காயங்கள் ஏற்பட்டன. அதே பகுதியை சேர்ந்த பகவான், அய்யம்மாள், அஞ்சலை, பத்மாவதி, கௌரி, சந்தியா, வெண்ணிலா, மஞ்சுளா உள்ளிட்ட 12 பேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரையும் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாவு வீட்டிற்கு வந்தவர்களுக்கு மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  திண்டிவனத்தில் தொடர்ந்து நடைபெறும் பாதாள சாக்கடைப் பள்ள விபத்துக்கள்.

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole