முகப்பு விக்கிரவாண்டி விக்கிரவாண்டி டோல்கேட்டை 35 ஆயிரம் வாகனங்கள் கடந்தன

விக்கிரவாண்டி டோல்கேட்டை 35 ஆயிரம் வாகனங்கள் கடந்தன

டோல்கேட்டில் 8 லேன்களும் திறப்பு

by Tindivanam News
vikravandi toll gate images

தீபாவளி விடுமுறை முடிந்து, நேற்று தென்மாவட்டங்களில் இருந்து 35 ஆயிரம் வாகனங்கள் விக்கிரவாண்டி டோல்கேட்டைக் கடந்து சென்றன. கடந்த 10 மற்றும் 11 தேதிகளில் சென்னையில் வசிக்கும் தென்மாவட்டங்களில் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் தீபாவளியை கொண்டாட தங்களது ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் 2 நாட்கள் தொடர்ச்சியாக 65 ஆயிரம் கார்கள் உட்பட 1 லட்சத்து 10ஆயிரம் வாகனங்களில் விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்து சென்றனர். விடுமுறை முடிந்த நிலையில், நேற்று மாலை 4:00 மணி முதல், வாகனங்கள் சென்னைக்கு திரும்பின. காலை முதல் சராசரியான போக்குவரத்து காணப்பட்டாலும் மாலை 4:00 மணிக்கு மேல் விறுவிறுப்பான போக்குவரத்து துவங்கியது. மாலை 6:30 மணிவரை 22 ஆயிரம் கார்கள் உட்பட 28 ஆயிரம் வாகனங்களும், நள்ளிரவு 12:00 மணி வரை 35 ஆயிரம் வாகனங்களும் டோல்கேட்டை கடந்தன. வாகனங்கள் அதிகமாக செல்லும் என்பதால் டோல்கேட்டில் 8 லேன்கள் திறக்கப்பட்டதால் வாகனங்கள் நெரிசலின்றி எளிதாக கடந்து சென்றன.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  பட்டாசு கடையில் வருமானவரித்துறை அதிகாரிபோல் திருட்டு

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole