முகப்பு விழுப்புரம் கோட்டகுப்பம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் (அம்பர்கிரீஸ்)

கோட்டகுப்பம் கடல் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம பொருள் (அம்பர்கிரீஸ்)

மதிப்பு மட்டும் சுமார் மூன்று முதல் ஐந்து கோடி என கூறப்படுகிறது

by Tindivanam News
whale remains amber grease washed ashore in tantrayankuppam sea worth 3 5 crores

கோட்டகுப்பம் அருகில் தந்திராயன்குப்பம் கடற்பகுதி அமைந்துள்ளது. கடற்கரை ஓரத்தில் 5 துண்டுகளாக மர்மப்பொருள் ஒன்று கரை ஒதுங்கியதை அங்கிருந்த காளிதாஸ் எனும் மீனவர் கண்டுள்ளார். பின்பு அங்குள்ள மீனவர்களுக்கும் தகவல் தெரிவித்து, கரை ஒதுங்கிய மர்ம பொருளை சேகரித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த வருவாய்த்துறை அதிகாரிகள் கரை ஒதுங்கிய மர்ம பொருளை ஆய்வு செய்தபோது அது திமிங்கலத்தின் எச்சம், அதாவது அம்பர்கிரீஸ் எனும் பொருள் என தெரிய வந்தது.

மேலும் கைப்பற்றப்பட்ட பொருட்களை கல்கத்தாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த அரியவகை பொருள் திமிங்கலத்தின் எச்சம் என அறியப்பட்டதால் இதனுடைய மதிப்பு சுமார் ஐந்து கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். இதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்பு கூனிமேடு கடல் பகுதியில் திமிங்கலத்தின் எச்சம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் நீங்கள் படிக்க விரும்புபவை...
  மருத்துவமனை எதிரில் பராமரிப்பு இல்லாத குடிநீர்த்தொட்டி

You may also like

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புற மக்களை இணைக்கும் நோக்கத்துடன் 2020’ல் துவங்கப்பட்ட, திண்டிவனத்தின் முதலும் மற்றும் நம்பர் 1 பிராந்திய செய்தித்தளம். 

 

வாசகர்களுக்கு நன்றிகள் !

Edtior's Picks

Latest Articles

© 2021 – 2024, All Rights Reserved by Tindivanam Seithigal.

Optimized by Optimole