திண்டிவனத்தில் நேற்று மாலை சுமார் ஒன்றரை மணி நேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை தொடர்ந்து பெய்த மழையால் முக்கிய சாலைகள் மற்றும் வீதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேப்பஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் அடைப்பு காரணமாக மழைநீர் மற்றும் கழிவுநீர் தெருக்களில் குளம்போல் தேங்கியது.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்த நிலையில், சாக்கடை கால்வாய்களை உடனடியாக சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.